தமிழகத்தில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்! January 6, 2022 10:03 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest தமிழகத்தின் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து, வரும் 10-ம் தேதி வரை கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவத் தொடங்கிய ஒமைக்ரான் தொற்று தற்போது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி உள்ளது. ஓமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிக அளவில் பரவி வருவதன் காரணமாக, மாநிலங்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது.மேலும், மாநில அரசுகள் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல் படுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஒரு சில மாநிலங்களில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில், தமிழ்நாட்டில்இன்று (ஜனவரி 6) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்குமென தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நிலவில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்தது விக்ரம் லேண்டர்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…