EPF நிதியில் 530 கோடியை வீணடித்த அரசாங்கம் January 8, 2022 12:48 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest ஊழியர் சேமலாப நிதியத்தில் 530 கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதி பயனற்ற வேலைத்திட்டங்களுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கமைய கடந்த 2020 ஆம் ஆண்டு ஊழியர் சேமலாப நிதியிலிருந்து முதலீட்டுக்காக செலவிடப்பட்டுள்ள 530 கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதியிலிருந்து திறைசேரிக்கு எந்தவிதமான பிரதிலாபமும் கிடைக்கவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2020 ஆம் ஆண்டு நிறுவனம் ஒன்றிற்காக 30 கோடி ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், பின்னர் குறித்த நிறுவனத்தின் அனுமதி பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் 500 கோடி ரூபா உணவக கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு முதலீடு செய்யப்பட்ட நிலையில், இதுவரை குறித்த நிதிக்கான பிரதிலாபங்கள் கிடைக்கப்பெறவில்லை என கணக்காய்வாளர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…