பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொண்ட முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். தமிழகத்தில், இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதியவர்கள், இணை நோயுள்ளவர்கள், முன்களப் பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது.
    
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசியை இன்று காலை செலுத்திக் கொண்டார்.

காவேரி மருத்துவமனையில் இன்று முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதல்வர் ஸ்டாலின், முன்களப் பணியாளர் என்ற முறையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டாக விளக்கம் அளித்தார். மேலும், தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு, நம்மையும், இந்த நாட்டையும் காப்போம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!