‘எங்களையும் கண்டு கொள்ளுங்கள்’ – மாற்றுத்திறனாளி வீரரின் கண்ணீர் கோரிக்கை!

அரியானாவை சேர்ந்த வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மல்யுத்த வீரர் விரேந்தர் சிங். கடந்த ஆண்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையால் பத்மஸ்ரீ விருது பெற்றவர். இவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் அவர்களே. நான் பாகிஸ்தானில் இருந்து வந்துள்ளேனா? அரியானாவில் தன்னை போன்று உள்ள காது கேளாத விளையாட்டு வீரர்களை அங்கீகாரம் செய்ய வேண்டும் என கேட்டுள்ளார்.
    
எங்களுக்கான கமிட்டி எப்போது அமைக்கப்படும்? சம உரிமையை என்று நான் பெறுவேன்? பிரதமர் மோடி அவர்களே. உங்களை நான் சந்தித்தபோது, அநீதி நடக்க விடமாட்டோம் என கூறினீர்கள். ஆனால், தற்போது அது நடந்து வருகிறது என தெரிவித்து உள்ளார்.

இதுதவிர, தன்னை போன்ற வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகளை முதல்-மந்திரி அங்கீககரிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவர், கடந்த ஆண்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையால் பத்மஸ்ரீ விருது பெற்றவர் ஆவார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!