நாட்டின் வருமானத்தை அதிகரிக்க உட்கட்டமைப்பு துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும்

நாட்டின் உட்கட்டமைப்பு துறையை அபிவிருத்தி செய்யும் பட்சத்தில் நாட்டின் வருமானமும் தன்னிச்சையாக அதிகரிக்கும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்ட்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

குருணாகல் பகுதியில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அமைச்சர் ஜொன்ஸ்ட்டன் பெர்னாணடோ இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, மீரிகம முதல் குருணாகலை வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் முதல் 12 மணித்தியாலங்களில் 13 ஆயிரத்து 583 வாகனங்கள் பயணித்துள்ளதோடு, 28 இலட்சத்து 5 ஆயிரத்து 100 ரூபாய் வருமானமாக கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் ஜொன்ஸ்ட்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அத்துடன், நாட்டின் குறைகள் தொடர்பில் விமர்சித்தவர்கள் அபிவிருத்திகள் மற்றும் வெற்றிகள் தொடர்பில் விமர்சிக்காமை ஏன்  எனவும் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!