
இதன்போது கிராம மக்கள் அனைவரும் எல்லம்மா கோவிலுக்கு இரவில் ஆடு, கோழிகளை பலிகொடுத்தனர்.
இதன்போது பலிகொடுப்பதற்கான ஆடு ஒன்றை 35 வயது இளைஞர் பிடித்துக்கொண்டிருந்தார்.
இந்தநிலையில் மது அருந்தி முழு போதையில் இருந்து ஆடு வெட்டுபவர் ஒருவர் குறித்த இளைஞனின் தலையை வெட்டியுள்ளார்.
இதனையடுத்து படுகாயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தநிலையில் குறித்த சம்பவம் தவறுதலாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!