ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்திற்கு மேலும் ஒருநாள் அவகாசம்

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்திற்கு மேலதிக காலத்தை வழங்க தீர்மானிக்கபட்டுள்ளது.

ஏற்கனவே, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதங்களை முன்னெடுக்க தீர்மானிக்கபட்டிருந்தது.

இந்த நிலையில், மேலதிக நேரத்தினை ஒதுக்கி தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமையையும் விவாதத்திற்கான நேரமாக ஒதுக்குவது தொடர்பில் சபாநாயகருக்கு அறிவிக்குமாறு சபை முதல்வருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!