கிளிநொச்சியில் எரிந்த நிலையில் தாய், மகளின் சடலங்கள்!

கிளிநொச்சி – தருமபுரம் புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் தாய் மற்றும் பிள்ளை ஒருவரின் சடலங்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
    
குறித்த சம்பவம் தந்தை மற்றும் ஏனைய சகோதரர்கள் வெளி மாவட்டங்களுக்கு வேலைக்கு சென்ற நிலையிலே அவர்களின் வீட்டில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என் பொலிஸார் தீவிர விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் இறந்தவர் 37 வயதுடைய ஆனந்தராசா சீதேவி 07 பிள்ளைகளின் தாயாரும் அவரது மகள் 17 வயதுடைய லக்சிகா இவர்களே இறந்தவர்கள் ஆவார்.

இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை தருமபுரம் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!