சுதந்திர தினத்தன்று பொதுமன்னிப்பில் விடுதலையாகும் ரஞ்சன்?

சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் சுதந்திர தினத்தில் விடுவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் தொடர்ச்சியாக  கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியை தொலைபேசி வழியாக மீண்டும் தொடர்புகொண்டு மனித நேயத்தின் அடிப்படையில் இந்த முடிவை எடுக்குமாறும் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, எதிர்வரும் சுதந்திர தினத்தில் ரஞ்சன் விடுவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!