கொரோனா கட்டுப்பாடுகளை ஏற்க மறுக்கும் பெல்ஜியம் மக்கள்: வலுக்கும் போராட்டம்!

உலகம் முழூவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. வைரசை கட்டுப்படுத்த பல நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இந்த நிலையில் பெல்ஜியம் நாட்டில் கொரோனா மற்றும் ஒமைரான் பரவலை கருத்தில் கொண்டு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளை அந்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
    
எனவே, அரசு பிறப்பித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைநகர் பிரஸ்சல்சில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!