அறிகுறியற்ற ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அதிகளவில் கண்டுபிடிப்பு! January 26, 2022 7:13 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest ஒமிக்ரோன் வைரஸ் தாக்கத்தின் போது எந்தவித அடையாளமும் வெளிப்படுத்தாது வைரஸ் தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பாரதூரமான அளவில் வைரஸ் தொற்றளார்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை வெளிப்படுத்துவதாகவும் சுகாதார பணியகம் தெரிவிக்கின்றது. நாட்டில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுப்பரவல் அதிகமாக பரவுவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் சுகாதார பணியகத்தின் அவதானிப்புகள் குறித்து தெரிவிக்கும் போதே சுகாதார பணியகத்தின் பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்தார்.ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுப்பரவலின் அதிகரிப்பு தன்மையொன்றே காணப்படுகின்றது. தொடர்ச்சியாக ஆறாவது நாளாகவும் 800 இற்கும் அதிகமான வைரஸ் தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கடந்த 24 நாட்களில் 15 ஆயிரத்து 197 கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரகாலத்தில் நாட்டில் மீண்டும் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காட்டுகின்றது. இது ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளமை பாரதூரமான விடயமாகும் என்றும் இதன்போது கூறினார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…