நீர்மட்டம் குறைந்தால் மின் உற்பத்திக்கு நீர் வழங்கமுடியாது! January 27, 2022 8:03 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest இயற்கை காரணங்களால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறையும் பட்சத்தில் மின்சார உற்பத்திக்கான நீரை விநியோகிக்காமல் பயிர்ச்செய்கை மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நீர் விநியோகத்தை நிர்வகிப்பது அவர்களின் பொறுப்பாகும் என்று கூறிய அமைச்சர், பயிர்ச்செய்கைக்கு தண்ணீர் வழங்கும் போது அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொள்கிறோம் என்றார்.வரட்சியின் காரணமாக நீர்மட்டம் குறைந்தால் நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட மாட்டாது. ஏனெனில் விவசாயத் துறையைப் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.வளிமண்டலவியல் திணைக்களத்தின் பரிந்துரைகளை தாங்கள் பரிசீலிப்பதாக கூறிய அமைச்சர் சமல், தாங்கள் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதில்லை என்றும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட மாட்டாது, தேவைப்படும் போது வழங்கப்படும் என்றும் கூறினார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…