சுய தனிமைப்படுத்திக்கொண்ட கனேடிய பிரதமர் ட்ரூடோ: கோவிட் பாதிப்பா? January 28, 2022 8:37 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அடுத்த 5 நாட்களுக்கு தன்னை சுய தனிமைப்படுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருடன் நேரடியாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டது தெரியவந்துள்ள நிலையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். வியாழக்கிழமை இரவு அவருக்கு இந்த விடயம் தெரியவந்ததும், அவர் உடனடியாக ரேபிட் சோதனையை மேற்கொண்டார். அந்த சோதனையின் முடிவில் அவருக்கு தொற்று ஏற்படவில்லை என்பது தெரியவந்தது.இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர், சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவதாகவும், 5 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்படுவதாகவும் கூறினார்.“நான் நன்றாக உணர்கிறேன், வீட்டிலிருந்து வேலை செய்வேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் – தயவுசெய்து தடுப்பூசி போடுங்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.50 வயதான ட்ரூடோ, முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளார். மேலும், ஜனவரி மாதம் ஒட்டாவாவில் உள்ள ஒரு மருந்தகத்தில் கூடுதலாக கோவிட்-19 தடுப்பூசியின் பூஸ்டர் டோஸையும் பெற்றார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் உடைகள்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… ஈரானில் மூன்று மரண தண்டனையில் இருந்து தப்பிய நபர் சிறையில் பரிதாப மரணம்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… கனடாவில் உணவுப் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…