ஆரோக்கியமான சமூகத்தினை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – விவசாய அமைச்சர் தெரிவிப்பு

கடின உழைப்பு மற்றும்  அர்ப்பணிப்பை கொண்ட ஆற்றல்மிக்கவர்கள் பசுமை விவசாயத்தில் வெற்றியடைய முடியும் என விவசாய அமைச்சர் மகிந்தானந்த அழுத்கம தெரிவித்தார்.

களுத்துறை – பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே இதனை தெரிவித்தார்.

அத்துடன் இம்முறைக்கான பெரும்போகத்திற்கு சேதனப்பசளையினை பயன்படுத்தியவர்கள் அறுவடையில் சிறிய அளவிலான வீழ்ச்சியினை  சந்தித்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

பசுமை விவசாயத்தினை ஊக்குவித்து ஆரோக்கியமான சமூகத்தினை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகுமென  விவசாய அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!