மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சர் கோரிக்கை

நாட்டில் இன்றைய நாளில் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, இன்று மாலை 6.30 முதல் இரவு 8 மணி வரையான காலப்பகுதியில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்

மின் விநியோக அமைப்பில் 20 மெகாவோட் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதன் காரணமாக இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மின் பிறப்பாக்கிகள் ஊடாக மின்சாரத்தை பெற்றுக்கொள்வதன் மூலம் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!