ஐக்கிய விவசாயிகள் அமைப்பின் அறிக்கை – எதிர்க்கட்சி தலைவர் தலைமையில்

ஐக்கிய விவசாயிகள் அமைப்பின் அறிக்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரம் அருகில் இந்த நிகழ்வு இடம்பெற்றதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்தின் அபிவிருத்தி, விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் எதிர்கால விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் முறைமைகள்  என்பன இதில் உள்ளடங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

பல்வேறு  விவசாய தலைவர்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்படும் குறித்த வேலைத்திட்டத்தில் பங்கேற்குமாறு நாட்டின் அனைத்து விவசாய சமூகத்தினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி மேலும் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!