கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 9 பேர் உயிரிழப்பு

நாட்டின் பல்வேறு  பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில்  இடம்பெற்ற விபத்துக்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெரும்பாலும்  சாரதியின் கவனக்குறைவு  காரணமாகவே  விபத்து ஏற்பட்டதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹல்தல்துவ  தெரிவித்துள்ளார்

காத்தான்குடி  எம்பிலிப்பிட்டிய சாவகச்சேரி  குருவிட்ட பள்ளம  புத்தளம் ஜா-எல,  ஹிங்குராங்கொட   ஆகிய பகுதிகளில் குறித்த விபத்துக்கள்   பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!