கனடாவில் பரபரப்பு: குடும்பத்துடன் தலைமறைவான ட்ரூடோ!

கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் தலைமறைவாகி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கனடா பிரதமரான் ஜஸ்டின் சமீபத்தில் எல்லையை கடக்க லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும் என அறிவித்திருந்தார்.
    
இந்த அறிவிப்புக்கு ஓட்டுநர்களை கடும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் கட்டாய தடுப்பூசி அறிவிப்புக்கு எதிராக கனடாவில் மிகப்பெரிய போராட்டம் நடந்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து, நூற்றுக்கணக்கான டிரக்குகள் தலைநகர் ஒட்டாவாவில் கூடியதை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்துடன் ரகசிய இடத்தில் தலைமறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இருந்தாலும், இருப்பினும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாதுகாப்பாக உள்ளார் என்றும் அவரது உயிருக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும் கனடா அரசு தெரிவித்துள்ளது.

மேலும், தொடர்ந்து ட்விட்டரில் ஜஸ்டின் ட்ரூடோ போஸ்ட் செய்து வருகிறார். தலைமறைவாக இருக்கும் இடத்தில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் பணிகளை செய்து வருகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!