இந்திய ஐ ஓ சி நிறுவனத்திடமிருந்துடீசல் கொள்வனவிற்கு அமைச்சரவை அனுமதி

இந்திய ஐ ஓ சி நிறுவனத்திடமிருந்து 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது,

40 ஆயிரம் மெற்றிக் தொன் பெற்றோல் மற்றும் டீசலை கொள்வனவு செய்வதற்கு எரிசக்தி அமைச்சு ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வந்தது,

இதனடிப்படையில் இலங்கைக்கு 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலை இலங்கைக்கு வழங்குவதற்கு ஐ ஓ சி நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,

இதேவேளை இந்திய ஐ ஓ சி நிறுவனத்திடமிருந்து  இலங்கை ரூபாவுக்கு டீசலை கொள்வனவு செய்ய கலந்துரையாடல்களை முன்னெடுக்க பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே நடைமுறையிலுள்ள கொள்வனவு நடைமுறைக்கமையவே ஐ ஓ சி நிறுவனத்திடம் எரிபொருளை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.,

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!