திவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஸ விடுவிப்பு

திவிநெகும திணைக்களத்துக்குச் சொந்தமான நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய வழக்கில் இருந்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் இன்று முற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட  நிலையிலே, இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!