மூன்றாவது நாளாகவும் ஆயிரத்தை தாண்டிய தொற்று!

நாளாந்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போர் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளன. சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, தொடர்ந்து மூன்றாவது நாளாகவும், ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
    
நேற்று, இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை, 1,137 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, நேற்று முன்தினம் 32 கோவிட் தொற்றுடன் தொடர்புடைய மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!