ரஞ்சன் ராமநாயக்க நாளை விடுதலை செய்யப்படுவாரா?

நாளை ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்படுவார் என உறுதியாக நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சிறையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவை இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஒரு கலைஞராக ரஞ்சன் ராமநாயக்க கலைத் துறைக்கு பெரும் சேவை ஆற்றி வந்தார். அவரது கொடுப்பனவுகள், சம்பளம், சலுகைகள், வரப்பிரசாதங்கள் அனைத்தையும் பொதுச் சேவைக்கே அர்ப்பணித்த ஒருவர் என்ற வகையில், நாளை அவர் முழுமையாக விடுதலை பெறுவார் என நம்புகிறோம். மனிதாபிமானத்திற்கு முன்னுரிமை அளித்து, மனிதாபிமானியி்ன் பூரண விடுதலைக்காக அவரை நாளை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன். மனித நேயத்திற்காகவே இந்த பரிந்துரையை முன்வைக்கிறேன்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!