பயங்கரவாத தடைச்சட்ட கைதிகள் 9 பேருக்கு பிணை!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 9 கைதிகளை விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 9 சந்தேக நபர்களும் தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
    
சந்தேகநபர்கள் கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் என சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் கைதிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!