விட்டுக்கொடுக்கத் தயார் இல்லை – இலங்கையிலுள்ள அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தவும் முடியாது – கோட்டாபய அதிரடி

நாட்டிற்காக ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புகளை நிறைவேற்றும்போது கிடைத்த சுதந்திரத்தின் அதிகபட்ச பலன் கிடைக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்று வரும் 74ஆவது சுதந்திர நிகழ்வில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்புகளை மறந்து உரிமைகளை பற்றி மாத்திரம் பேசுவது பொருத்தமானதல்ல. ஒரு நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதில் நாட்டிலுள்ள அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்க முடியாது.

எதிர்கால சுபீட்சத்திற்காக திட்டமிட்டதை விட்டுக்கொடுக்க தயாரில்லை. நாட்டிற்கு சரியானதைச் செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அனைவரையும் மகிழ்விப்பது அல்ல.

அவநம்பிக்கையாளர்களால் உலகை மாற்ற முடியாது. பிரச்சினைக்கு தீர்வு காணாமல் விமர்சித்து பழகியவர்களுக்கு எதிர்காலம் குறித்த தொலைநோக்கு பார்வை இல்லை.

கடினமான காலங்கள் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இதுபோன்ற நேரங்களை எதிர்கொள்ள வலிமையானவர்கள் தேவை. மற்றவர்களை மனரீதியாக வீழ்ச்சியடைய செய்யும் நபர்கள் சமூகத்திற்கு உதவ மாட்டார்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!