ரஞ்சனை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க கூறியுள்ளார்.
    
74 ஆவது சுதந்திர தினமான நேற்று ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவார் என்ற நம்பிக்கையுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு 197 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலையை எதிர்பார்த்து நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் புதிய மெகசின் சிறைச்சாலைக்கு முன்பாக இன்று காணப்பட்டனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே சிறைச்சாலை பேச்சாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!