கொரோனா தொற்று 30 வீதம் அதிகரிப்பு!

இந்த வாரம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
    
அத்துடன் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இறப்பு எண்ணிக்கையில் 10 சதவீதம் அதிகரிப்பை அவதானிக்க முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பதிவான இறப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு முழுமையாக தடுப்பு செலுத்திக் கொள்ளாதவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேசிய வைத்தியசாலையில் ஒட்சிஜன் தேவைப்படும் நோயாளிகளும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!