கச்சத்தீவு விழாவில் தமிழக மீனவர்களை அனுமதிக்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!

ஒவ்வொரு வருடமும் கச்சத்தீவில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அந்தோணியார் கோவில் திருவிழா மிகவும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் பலர் கலந்து கொள்வதுண்டு. இந்நிலையில், இந்த விழாவில் தமிழக மீனவர்கள் கலந்து கொள்ள இலங்கை அரசு தடை விதித்துள்ளதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கச்சத்தீவு விழாவிற்கு தமிழக மீனவர்களை அனுமதிக்க கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    
முதல்வரின் இந்த கடிதத்தை டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் திமுக எம்.பி.டி.ஆர்.பாலு அவர்கள் வழங்கினார். அக்கடிதத்தில் கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க இலங்கை அரசிடம் அனுமதி பெற்றுத் தருமாறும், தமிழக மீனவர்கள் கச்சத்தீவு\ திருவிழாவில் பங்கேற்பது உணர்வுபூர்வமாக கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேட்டியளித்துள்ள திமுக எம்.பி.டி.ஆர்.பாலு அவர்கள், ‘இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் பிப்ரவரி 6-ம் தேதி டெல்லி வரும்போது கச்சத்தீவு தேவாலயத்தில் தமிழ்நாடு பக்தர்களுக்கு அனுமதி தொடர்பாக பேசுவதாக வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!