வவுனியா பல்கலைக்கழகம் இன்று திறந்து வைப்பு

நாட்டின்  17  ஆவது  பல்கலைக்கழகமாக  வவுனியா பல்கலைக்கழகம் இன்று திறந்துவைக்கப்படவுள்ளது.

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமையில் குறித்த பல்கலைக்கழகம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளதாக  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 யாழ்ப்பாண பல்கலைக்கழக  வவுனியா வளாகம்  வவுனியா  பல்கலைக்கழகம் என   பெயரிடப்பட்டு   வர்த்தமானி அறிவித்தல் கடந்த  2021 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் 8 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் வவுனியா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்காக இதுவரை  400 சிங்களமொழி மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!