மின் கட்டணத்தை செலுத்த நுகர்வோருக்கு கால அவகாசம்

மின்சார கட்டணத்தை செலுத்த தவறியுள்ள நுகர்வோருக்கு எஞ்சியுள்ள கட்டணத்தை செலுத்துவதற்காக 03 மாத கால அவகாசத்தை வழங்குவதற்கான கட்டளை இன்று பிறப்பிக்கப்படவுள்ளது. 

இதற்கமைய 03 மாதங்களுக்குள் தாமத கொடுப்பனவை செலுத்த தவறும் நுகர்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

மேலும், அவ்வாறு கொடுப்பனவை செலுத்த தவறும் மின் பாவனையாளர்களுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார். 

இதேவேளை, எதிர்வரும் 03 மாதங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை  பொது பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!