ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அதிர்ச்சி தகவல்….!!

ஒமிக்ரோன் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. 

தற்போது நாட்டில் அடையாளம் காணப்படுகின்ற அனைத்து கொரோனா தொற்றாளர்களும் ஒமிக்ரோன் வைரஸ் வகை திரிபினால் பாதிக்கப்பட்டவர்கள் என சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் ரஞ்சித் படுவந்துடாவ தெரிவித்துள்ளார். 
மேலும், ஒமிக்ரோன் தொற்று குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நோய் என்பது தவறான கருத்தாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 அத்துடன்,ஒமிக்ரோன் தொற்று காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் பலர் சிகிச்சை பெற்று வருவதாக வைத்திய நிபுணர் ரஞ்சித் படுவந்துடாவ குறிப்பிட்டார். 

இந்நிலையில், தடுப்பூசி மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வது மிக அவசியம் என்றும் விஷேட வைத்திய நிபுணர் ரஞ்சித் படுவந்துடாவ மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!