“நாம் தமிழர் கட்சி தோற்றால் அது மக்கள் தோற்றதற்கு சமம்” – சீமான் ஆவேசம்!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி தோற்றால் அது மக்கள் தோற்றதற்கு சமம் என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில், நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தனித்துதான் போட்டியிடுகிறது; நாங்கள் தோற்றால் அது மக்கள் தோற்றதற்கு சமம்.
    
வீடு வீடாகச் சென்று சீமானுக்கு வாக்கு செலுத்த வேண்டாம், அது பாஜகவுக்கு சென்று விடும் என்று பிரப்புரை செய்கின்றனர்; பாஜக தனித்து நிற்கிறது.

அப்படி இருக்கும்பொழுது நான் எப்படி பாஜக “பி” டீம் ஆக இருப்பேன். மாற்றம் வேண்டும் என்பது வார்த்தையாக இல்லாமல், சொல்லாகவும் செயலாகவும் இருக்க வேண்டும்.

பணம் இருப்பவர்கள்தான் இங்கு ஜெயிக்க முடியும் என்றால், இது உழைக்கும் மக்களுக்கான இடமாக இருக்காது; ஓட்டுக்கு பணம் தருவது, எப்பொழுதுதான் ஒழியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!