உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசேட அறிக்கை நாடாளுமன்றில் February 22, 2022 8:47 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிக்கை ஜனாதிபதி சட்டதுறை பணிப்பாளர் ஹரிகுப்த ரோஹனதீரவினால் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் அதற்கான சாட்சியங்கள் அடங்கிய தொகுதியே சபாநாயகரிடம் கையளிக்கபட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.இதேவேளை, கடந்த ஆண்டு ஏப்ரல் 8 ஆம் திகதி குறித்த அறிக்கை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும் சட்ட ரீதியான காரணங்களுக்காக வெளியிப்பட வில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த இறுதி அறிக்கை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…