வாகன விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் இந்த ஆண்டு ஜனவரி  மாதம் முதல்   இதுவரையான காலப்பகுதியில்  இடம்பெற்ற வாகன  விபத்துக்களில் 434 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஜனவரி மாதம்  முதலாம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் குறித்த மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த ஒரு  வாரத்தில்  மாத்திரம்   44 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்   பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

 இதேவேளை பெரும்பாலும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள்  இவ்வாறு  விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!