இலங்கை குறித்த ஜெனிவா விவாதம் ஒத்திவைப்பு!

இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மீது நாளை இடம்பெறவிருந்த விவாதம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
    
உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையினால் உருவாகியுள்ள நிலைமை குறித்து மனித உரிமை பேரவை அவசரமாக விவாதிக்கவேண்டிய நிலை காணப்படுவதாலேயே இலங்கை குறித்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் இராணுவநடவடிக்கை தொடர்பான விசேட விவாதம் மூன்றாம் திகதி இடம்பெறும். இதுதொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக மனித உரிமை பேரவையின் 47 உறுப்புநாடுகளில் 29நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!