தொடர் மின்தடைக்கு எதிர்ப்பு: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

நாட்டில் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு  வரும் தொடர் மின்தடைக்கு எதிராக மெழுகுவர்த்தி   ஏந்தி எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

செம்மணி A9 வீதி சந்தி மற்றும் மட்டக்களப்பு – கோட்டைக்கல்லாறு மற்றும் பெரிய கல்லாறுக்கு இடைப்பட்ட பாலத்தில் இன்று  இரவு 8.30 மணிக்கு இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் தங்களது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளனர்.
இரா.சாணக்கியன் தனது முகப்புத்தகத்தில் இட்டுள்ள பதிவில்,

”தற்பொழுது நாட்டில் பரவலாகப் பல மணிநேர மின்சாரத்தடை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது. இதனால் மக்கள் அன்றாடம் பல பாதிப்புக்களுக்கு உள்ளாகிறார்கள்.

இதனை எதிர்க்கும் முகமாக இன்று 8.30 மணிக்குச் செம்மணி A9 வீதி சந்தி மற்றும் மட்டக்களப்பு – கோட்டைக்கல்லாறு, பெரிய கல்லாறுக்கு இடைப்பட்ட பாலத்தில் அனைத்து மக்களும் தங்களது எதிர்ப்பினை வெளிக்காட்டும் முகமாக மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் சகிதமாக வருகை தந்து தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!