இலங்கை பிரதிநிதிகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கிடையில் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்  பேரவையின் 49 ஆவது அமர்வில் கலந்து கொண்டுள்ள  இலங்கை பிரதிநிதிகள்  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரை  சந்தித்துள்ளனர்.

ஜெனீவா நகரில்  அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் தலைமை  அலுவலகத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

 இலங்கை தொடர்பான நிலைப்பாடுகளை முன்வைப்பதற்காக  ஜெனீவா சென்றுள்ள  வெளிவிவகார  அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் மற்றும் வெளி விவகார செயலாளர்  ஜயனாத் கொலம்பகே, மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோர்   குறித்த சந்திப்பில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை தொடர்பான விசேட விவாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்  இன்று இடம்பெறவுள்ளது.. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!