சட்டவிரோத நிதி சேகரிப்பில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் தொடர்பில் விசாரணை March 7, 2022 9:16 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest நாட்டில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத நிதி சேகரிப்பு தொடர்பில் ஆராயும் விதமாகச் சட்டவிரோத நிதி சேகரிப்பில் ஈடுபட்ட 1100 பேர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகச் சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.சட்டவிரோத சொத்துகள் தொடர்பாக விசாரணை பிரிவினால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.அத்துடன் பணமோசடி சட்டத்தின் கீழ் 78 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுக் கிடைக்கும் பணத்தில் ஈட்டப்படும் சொத்துக்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளச் சிறந்த அனுபவமிக்க அதிகாரிகளுடன் இந்த விசாரணை பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…