நாடாளுமன்ற ஆசனங்களில் மாற்றம்….

அமைச்சுப் பதவிகள் மாற்றப்பட்டதனைத் தொடர்ந்து முதல் தடவையாக நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது.

இதன் பின்னணியில், நாடாளுமன்ற ஆசனங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு பின்வரிசை ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க நாடாளுமன்றத்தின் சிரேஷ்ட உறுப்பினர் என்பதன் காரணமாக ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கான இடத்தில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், போக்குவரத்து அமைச்சராக  நியமிக்கப்பட்டுள்ள திலும் அமுனுகமவின் ஆசனமும் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!