இலங்கையில் முதலீட்டு வாய்ப்புக்கள் அழிக்கப்பட்டுள்ளன! March 14, 2022 7:56 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட தொகை 2 பில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைந்துள்ளதாக தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, முதலீடு செய்ய பலர் ஆர்வம் காட்டி வருகின்ற போதிலும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினால் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புக்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கொழும்பில் நேற்றுஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணத்தின் மூலமான இலங்கையின் முக்கிய வருமான ஆதாரத்தை இழந்துள்ளதாகவும் புதிய அரசாங்கம் ஒன்று நியமிக்கப்பட்டு, உத்தியோகபூர்வ வழிகளில் தங்கள் பணத்தை இலங்கைக்கு அனுப்புமாறு புலம்பெயர்ந்தவர்களைக் கோரினால், அவர்கள் நாட்டுக்கு ஆதரவளிப்பார்கள் என்று அவர் கூறினார்.இலங்கையில் முதலீடு செய்ய வெளிநாட்டினரை அழைப்பதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்திய அவர், அரசியல்வாதிகள் ஆர்வமுள்ள தரப்பினரிடம் லஞ்சம் கோருவதால், இதுபோன்ற பல பணம் அனுப்பப்படுவது குறைவடைவதாகத் தெரிவித்தார்.புலம்பெயர்ந்தோரின் வருமான வழிகளை மீளக் கட்டியெழுப்புவதன் மூலம் அண்டை நாடுகளிடமிருந்து கடன் பெறுவதைத் தவிர்க்க முடியும் என குறிப்பிட்டார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…