இந்தியா – இலங்கை பொருளாதாரம் குறித்து கலந்துரையாடல்

நிதியமைச்சர் பெஷில் ராஜபக்‌ஷ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெயசங்கர் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு நேற்று இரவு இடம்பெற்றதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதரம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நிதியமைச்சர் பெஷில் ராஜபக்‌ஷ மற்றும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன், பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Vikram Misri ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!