சீனாவின் ஆதிக்கத்தை எதிர்க்கிறோம்!

வடக்கு – கிழக்கு பகுதிகள் சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் செல்வதை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.
    
இலங்கையில் சீனாவின் ஆதிக்கப் பங்கை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? இலங்கையுடன் இந்தியா கொண்டுள்ள வரலாற்று உறவை இது சீர்குலைக்குமா? என்ற கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில் –
“இலங்கை நீண்ட காலமாக சீனாவுடன் நெருங்கிச் செயற்படுகின்றது. நாங்கள் அதை எதிர்த்துள்ளோம். நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு ஏற்கனவே சீனாவின் கைகளில் உள்ளது. ஆனால் வடக்கையும் கிழக்கையும் சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் செல்வதை நாங்கள் கடுமையாக எதிர்த்துள்ளோம்.

சீனர்களை விரட்டியடிக்கும் வகையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவதை இந்திய அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்பதற்கான மற்றொரு காரணம் இதுவாகும். இலங்கையுடன் சீனாவின் அதிகரித்து வரும் நட்பு உண்மையில் இந்தியாவுடனான நமது உறவை மேம்படுத்துகிறது. ஒரு பெரிய மற்றும் அண்டை நட்பு நாடாக, இந்தியா இலங்கையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை, வெளிநாட்டு சக்திகள் இங்கு களமிறங்குவது குறித்து கவலை கொண்டுள்ளது.

எனவே, தமிழ் மக்களுக்கு சுயராஜ்யம் இருப்பதை உறுதி செய்வதற்கும், மற்ற வெளிநாட்டு சக்திகள் தலையீடு செய்து, செயல்முறையை சீர்குலைக்காமல் இருப்பதற்கும் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!