ஜனாதிபதியிடம் நிறைவேற்று அதிகாரம் இருந்து என்ன பயன்..! கோட்டாபயவிடம் இதை எதிர்பார்க்கவில்லை: ஞானசார தேரர்

அத்தியாவசியமான பயணங்களை மேற்கொள்ளும் போது வீதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. இவற்றை கட்டுப்படுத்த வேண்டும். நிறைவேற்று அதிகாரம் இருக்கிறது.

அந்த பலத்தை பயன்படுத்தாமல் இருப்பதால் என்ன பிரயோசனம் என பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இப்படியான ஆட்சி நிர்வாகத்தை எதிர்பார்க்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!