அரசாங்கத்தின் அபத்தமான செயல் பற்றி கூறும் சரத் அமுனுகம March 22, 2022 7:54 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest நாட்டின் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் எதிர்க்கட்சியில் இருந்த போது, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கையின் வளங்கள் வழங்கப்படாது எனவும் வழங்கப்பட்டவை திரும்ப பெறப்படும் எனவும் கூறியது அபத்தமானது என மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் நாட்டின் தற்போதை பொருளாதார நெருக்கடி தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் இதனை கூறியுள்ளார்.கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக வரிகளை இரத்துச் செய்திருக்கக் கூடாது. வரிகளை இரத்துச் செய்ததன் காரணமாக நாட்டுக்கு ஒரு ட்ரில்லியன் அதாவது ஒரு லட்சம் கோடி ரூபாய் வரி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.இப்படியான அபத்தனமான நடவடிக்கைகள் காரணமாக நாடு அழிவின் விளிம்பிற்குள் விழுந்துள்ளது எனவும் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…