200 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மருந்துகளை இறக்குமதி செய்ய யோசனை

இந்தியாவிடம் பெற்றுக்கொள்ளப்படவுள்ள கடன் தொகையில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மருந்துகளை இறக்குமதி செய்ய எதிர்பார்த்துள்ளதாக மருந்து ஒழுங்குபடுத்தல் மற்றும் விநியோக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்திடம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்;கப்பெறவுள்ள நிலையில் குறித்த தொகையிலேயே 200 மில்லியன் டொலர்களுக்கு மருந்துகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு பதிவு செய்யப்பட்ட இறக்குமதியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அதற்கிணங்க இறக்குமதிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!