உலக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்க்க துபாய் செல்கிறார் தமிழக முதல்வர்!

உலக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், சர்வதேச கண்காட்சியில் தமிழகத்தின் அரங்கினை திறந்து வைப்பதற்காகவும் தமிழக முதல்வர் இன்று மாலை துபாய் செல்ல இருக்கிறார். துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி உலக கண்காட்சி தொடங்கியது. வருகின்ற மார்ச் 31ம் தேதி வரை இந்த கண்காட்சியானது நடைபெறுகிறது.
    
இக்கண்காட்சியில் மார்ச் 25 முதல் 31 வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு சார்பாக தமிழ்நாடு அரங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. இதனைத் திறந்து வைப்பதற்காக இன்று மாலை துபாய் செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,

அபுதாபி செல்லும் தமிழக முதல்வர் தமிழ் நாட்டிற்கான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காகத் துபாயின் முன்னணி தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளைச் சந்திக்க உள்ளார். அதேபோல் புலம்பெயர் தமிழர்களுடன் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!