இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை! மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கை தொடர்பான தமது அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள நிலையில் இது தொடர்பான அறிவிப்பொன்றை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

அதன்படி குறித்த அறிக்கையின் சில பரிந்துரைகளை இலங்கை ஏற்கனவே அமுல்படுத்தியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு நேரடியாக பிரதிபலன் கிடைப்பதற்காக, சர்வதேச நாணய நிதியத்துடன் நெருங்கி செயற்படத் தயார் என சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை எதிநோக்கியுள்ள நிலையில், பொருளாதார நெருக்கடி பற்றிய பகுப்பாய்வு சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் பரவல் இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்ததுடன், இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை பாதிக்கப்பட்டிருந்ததுடன் பல கடுமையான முடக்கங்கள் தேவைப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்திற்கும் அதிகமான நிதிப் பற்றாக்குறைக்கு வழிவகுத்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!