31 இலட்சம் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா விசேட கொடுப்பனவு!

பண்டிகை காலத்தை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவாக 5 ஆயிரம் ரூபாவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
    
ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா வீதம் இந்த விசேட கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அடையாளம் காணப்பட்ட, குறைந்த வருமானங்களை பெறும் 31 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவானது வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!