புத்தாண்டுக்கு பின் நாடாளுமன்றத்தில் பெரிய மாற்றம் ஏற்படும்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை கட்டியெழுப்ப கூடிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க எனவும் அவரிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு சமூகத்திற்குள் ஏற்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த காரணத்தின் அடிப்படையிலேயே தேசிய அரசாங்கம், கூட்டு அரசாங்கம் அமைக்கப்படவுள்ளதாகவும் பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படவுள்ளதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன.

எவ்வாறாயினும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் நாடாளுமன்றத்தில் பெரிய மாற்றம் ஏற்படும் என்பது தனது நம்பிக்கை எனவும் ருவான் விஜேவர்தன கூறியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற சந்திப்பொன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!