பரீட்சை வினாத்தாள் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்த செய்தி….. March 31, 2022 10:30 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கு தேவையான கடதாசி பற்றாக்குறை காணப்படவில்லை என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.அத்துடன், அனைத்து பரீட்சைகளையும் திட்டமிட்டபடி நடாத்துவதற்கான நடவடிக்கைகளை பரீட்சைகள் திணைக்களம் முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன்படி, கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைகளை எதிர்வரும் மே மாதம் நடாத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.இதனிடையே, இந்த வருடம் மேலும் பத்தாயிரம் மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, பல்கலைக்கழகங்களில் மணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…