காபந்து அரசு அமைக்காவிடின் வெளியேற முடிவு!

காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஜனாதிபதியிடம் யோசனை முன்வைத்துள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நடந்த ஆளும் கட்சி கூட்டத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புறக்கணித்துடன், கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திரக்கட்சியின் மத்தியக்குழு நேற்று மாலை கூடியது.
    
இந்தக் கூட்டத்தில், காபந்து அரசாங்கமொன்றை ஜனாதிபதி அமைக்காத பட்சத்தில் அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதற்கு சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்தில் நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்க கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!